இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்திய புள்ளியியல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள், “தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் வரவில்லை” என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், ஒன்றிய அரசின் இந்த அறிக்கை, தமிழ்நாடு அரசின் வளர்ச்சி முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது, “மக்களின் கண் முன்னே வளர்ச்சி தெளிவாக தெரிகிறது; அதுவே உண்மையான வெள்ளை அறிக்கை,” என்று கூறியிருந்தார்.
அதேபோல், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அண்மையில் “இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யும் முதலமைச்சர் யார்?” என்ற கேள்விக்கு, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்” என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய புள்ளியியல் துறையின் சமீபத்திய அறிக்கை, தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு விரிவாக்கம் தேசிய அளவிலும் குறிப்பிடத்தக்க நிலையை பெற்றிருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இதன் மூலம், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள தொழில் வளர்ச்சி முயற்சிகள் நேர்மறையான விளைவுகளை அளித்து வருவதை தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இல்லாமல் நிதானமாக எப்படி நடந்து கொண்டால் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யோசித்து உரியவர்களோடு கலந்து ஆலோசித்து நடவடிக்கைகள் எடுத்து கொண்டு இருக்கிறார் தமிழக முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
#திராவிட_மாடல் ஆட்சியின் சிறப்பு இது தான்.